
கோலாலம்பூர், ஜூன் 16 – ஜூன் 17 ஆம் தேதி முதல் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி ராஜினாமா செய்த பிறகு அந்த அமைச்சு கலைக்கப்படாது. இதற்கு முந்தைய பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின்போது இந்த அமைச்சு உருவாக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பொருளாதார அமைச்சும், பிரதமர் துறையின் கீழ் பொருளாதார திட்டமிடல் பிரிவாக இருந்தது. பின்னர் முதல் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ் இப்போது சில ஆண்டுகள், அது ஒரு அமைச்சாக இருந்து வருகிறது. எனவே அந்த அமைச்சை அகற்றும் என்ற பிரச்னை எழவில்லை.
அமைச்சரவைதான் இது குறித்து முடிவு செய்யும். பொருளாதார அமைச்சில் எந்த பிரச்னையும் எழவில்லை. அமைச்சரவைத்தான் அதனை முடிவு செய்யும். எனவே அதனை மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லையென தாம் கருதுவதாக அன்வார் தெரிவித்தார். பொருளாதார அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றிய சகோதரர் ரபிசிக்கு எனது பாராட்டையும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த அமைச்சர் அல்லது எந்த அமைச்சு அந்தப் பணியைச் செய்யும் என்பதை நான் முடிவு செய்வேன் என்று அவர் மேலும் கூறினார்.