Latestமலேசியா

பொறியில் சிக்கியது 105 கிலோ எடையிலான சூரிய கரடி; மற்றொரு கரடியும் குட்டியும் தலைமறைவு

செத்தியூ, திரெங்கானு, மே 29 – இன்று அதிகாலை, செத்தியூ சுங்கை டோங்கிலுள்ள கம்போங் மெர்பாவில், வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையினரால் (PERHILITAN), வைக்கப்பட்ட பொறியொன்றில் 105 கிலோகிராம் எடையுள்ள சூரிய கரடி ஒன்று சிக்கியது.

இதற்கு முன்பு பல முறை, அக்கரடியைப் பார்த்ததாகவும், கொல்லைப்புறத்தில் சேமித்து வைத்த சமையல் எண்ணெயை சாப்பிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் பிடிப்பட்ட சூரிய கரடியைப் போன்ற மற்றொரு கரடியும், இன்னும் ஒரு குட்டி கரடியும் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகின்றதென்று அக்குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட சூரிய கரடியை, அதன் அசல் வாழ்விடத்தில் மீண்டும் விடுவிக்கப்பட்டதாக திரெங்கானு ‘பெர்ஹிலித்தான்’ இயக்குனர் லூ கீன் சியோங், கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!