
கோலாலம்பூர், ஜூன் 3 – விடுறையை முன்னிட்டு Mersingகிற்கு அருகே Pulau Mentigi கடலில் உல்லாசமாக குளிக்கச் சென்ற ஒரே
குடும்பத்தைச் சேர்நத் இரண்டு பிள்ளைகள் நீரில் மூழ்கி மாண்டனர்.
நேற்று மாலை மணி 4.25 அளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 15 வயதுடைய Nur Awatif Udaima Hisam என்ற பெண்ணும் அவளது 13 வயது சகோதரன் Ahmad Uwais Al Qarniவும் காணவில்லையென தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை தேடும் நடவடிக்கை மலேசிய கடல் அமலாக்க பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த கடல் பகுதிக்கு ரோந்து படகு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதோடு பொதுமக்களின் உதவியோடு மாலை மணி 4.30 அளவில் Nur Awatif Udaimaவின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட வேளையில் இரண்டு மணி நேரத்திற்குப் பின் அவரது சகோதரன் Ahmad Uwais உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது.
பள்ளி விடுமுறையில் அவர்களது குடும்பத்தினர் Pulau Tinggiயிலுள்ள தங்களது கிராமத்திற்கு வந்திருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக Mersing கடல் அமலாக்க துறையின் இயக்