
மாஸ்கோ (Moscow ) மற்றும் கீவி (Kyiv ) இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) தொடர்புக் கொண்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
அதிகமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் போரை, முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அனைத்து தரப்பினரும், குறிப்பாக ரஷ்ய அதிபர் புதின் ஈடுபட வேண்டுமென்பதே உரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கின்றது.
மேலும், போர் நிறுத்தத்தைப் பற்றி புதின் தொடர்ந்து அமைதி காத்து வரும் நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து , உக்ரைன் ஜனாதிபதி, ஐரோப்பிய ஆணைய தலைவர், பிரெஞ்சு அதிபர், இத்தாலிய பிரதமர், ஜெர்மன் அதிபர் மற்றும் பின்லாந்து அதிபர் போன்ற உலக தலைவர்களுக்கு, ‘புதின்’ உடனான அழைப்பின் உள்ளடக்கத்தை விளக்கியதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.