
ஜோகூர் பாரு, ஏப்ரல் 21 – சிம்பாங் அம்பாட் பெல்டா உலு தெப்ராவ் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் MPV வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் ,சகோதரியும் உயிரிழந்தனர்.
கடுமையாக காயம் அடைந்த 20 வயதுடைய Nuraisyah Amalin Zaibur யும் அவரது தம்பியான 15 வயதுடை Ammar Saifullah வும் தலையில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர். இரவு மணி 9.50 அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஹோன்டா மோட்டார் சைக்கிளை அமார் சைபுல்லா ஓட்டிச் சென்றதோடு அவரது சகோதரி Nurasya பின்னால் அமர்ந்திருந்ததாக ஸ்ரீ அலாம் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.
சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் எரிந்துகொண்டிருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் அந்த மோட்டார்சைக்கிளோட்டி சாலையின் வலது பக்கம் திரும்பியதாகவும் அப்போது சாலையின் எதிர்ப்புறம் 40 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஓட்டிச்சென்ற Toyota Estima MPV வாகனம் அந்த மோட்டாசைக்கிளில் மோதியதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Mohd Sohaimi தெரிவித்தார். 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) விதிமுறையின் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.