
அஹமதாபாத், ஜூன்-14 – இந்தியா, அஹமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களில், மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வந்த லண்டன் ஆடவரும் ஒருவராவார்.
அர்ஜூன் பட்டோலியா, தனது மனைவி பாரதி பென் மற்றும் 2 மகள்களுடன் லண்டனில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் பாரதி உயிரிழந்தார்; தான் இறந்து விட்டால் அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊரில் ஆற்றில் கரைக்க வேண்டுமென, சிகிச்சையின் கடைசி நாட்களில் கணவரிடம் அவர் கேட்டுள்ளார்.
மனைவியின் ஆசையை நிறைவேற்ற இந்தியா வந்த அர்ஜூன், அஸ்தியைக் கரைத்து விட்டு ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் புறப்பட்டார்.
ஆனால் அதுவே அவரின் கடைசிப் பயணமாகி விட்டது.
அஹமதாபாத் விமான விபத்தில் பலியான 241 பயணிகளில் அவரும் ஒருவராகி விட்டார்…
8 மற்றும் 4 வயதிலான 2 பெண் பிள்ளைகள் கடந்த வாரம் தான் தாய் பாரதியை இழந்தனர்.
அர்ஜூன் வருவார் என லண்டனில் காத்திருந்த இருவரும் தற்போது தந்தையையும் இழந்துள்ளனர்.
அவர்களுக்கு யார், எப்படி ஆறுதல் கூறுவார்கள் என நினைத்தால் நமது மனமும் கலங்கத்தான் செய்கிறது..