Latestமலேசியா

12வது மாணவர் முழக்கம்: அரையிறுதிச் சுற்றுக்கான முடிவுகள்

கோலாலம்பூர், டிசம்பர் 9 – வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் முழு ஒத்துழைப்புடன் 12வது ஆண்டாக மலர்ந்துள்ளது மாணவர் முழக்கம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 2024.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாதத் திறமைக்கென்று உதித்துள்ள மாணவர் முழக்கத்தின் இவ்வாண்டிற்கான தேர்வுச் சுற்றுக்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்த நிலையில், சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்திய 40 மாணவர்கள் காலிறுதிச் சுற்றிலும், அதிலிருந்து 14 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றிலும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், அரையிறுதிச் சுற்றில் திறம்பட பேசிய நான்கு போட்டியாளர்கள் மாபெரும் இறுதிச் சுற்றில் களம் இறங்கவுள்ளனர்.

அவர்கள் இவர்கள்தான்:

1. கெடா, கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கிரிஷன் கோகுலபாலன். 


2. ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செஸ்வின் ராவ் ஆனந்தன்.


3. பேராக், ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 1 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சஸ்மித்தா வசன் குமார்.


4. சிலாங்கூர், காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ரக்ஷனா பூபாலன். 

இவர்களே எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் இறுதி சுற்றுக்குத் தேர்வாகிய பேச்சாளர்கள்.

இதனிடையே, அரையிறுத்திச் சுற்றில் சிறந்த படைப்பினை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட 5 மாணவர்களுக்கு “வளரும் நட்சத்திரம்” எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம், இம்மாணவர்கள் தங்களின் முயற்சியைத் தொடர ஊக்குவிப்பாக அமைய வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவர்கள்தான் இவ்வாண்டிற்கான மாணவர் முழக்கம் போட்டியின் வளரும் நட்சத்திரங்கள் :

1. நெகிரி செம்பிலான், கோலப்பிலா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கனிஸ்கா முனியாண்டி.


2. பேராக், பங்கோர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த வள்ளுவன் ரவீந்திரன். 


3. ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சர்வின் ராவ் ஆனந்தன்.


4. சிலாங்கூர், தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கவினேஷ் ராஜ குமார்.


5. பஹாங், பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பவதாரணி மதுரை முத்து.

இதனிடையே நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நேரடி நிகழ்ச்சியாக மிக பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இந்த இறுதிச் சுற்றில், சீரிய வாதங்களையும், சீறிப் பாயும் இளம் செல்வங்களின் கூரிய கருத்துகளைக் கேட்க உங்களுக்கும் ஆர்வமா?

கோலாலம்பூர் பத்துமலை ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் இறுதிச் சுற்றில் இணைய மறவாதீர்கள்.

இது மாணவர் முழக்கம்; தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தமிழ் முழக்கம்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!