
கோலாசிலாங்கூர் – மே 27 – கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து Transformer களை திருடியதாக சந்தேகிக்கப்பட்ட 19 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகாலை மணி 2.10 அளவில்
கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ரோந்து கார் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர்களால் அந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superinendan Azaharudin Tajudin தெரிவித்தார். Mitsubishi Fuso லோரி, Toyota Hilux வாகனம் மற்றும் Honda RS-X ஆகியவவை பெஸ்தாரி ஜெயா , ஜாலான் Hopeful லில் சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த லோரியை போலீஸ் ரோந்து வாகனம் பின்தொடர்ந்து சென்றதைத் தொடர்ந்து Toyota Hilux மற்றும் மோட்டார் சைக்கிளும் தடுத்து நிறுத்தப்பட்டது. பரிசோதனை மேற்கொண்டபோது Toyota Hilux சிலிருந்து அனைத்து பயணிகளும் கீழே இறங்கிய பின்னர் அதன் ஓட்டுனர் அந்த வாகனத்தை ஓட்டி தப்பிச் சென்றார். பறிமுதல் செய்யப்பட்ட லோரியில் சோதனை நடத்தப்பட்டபோது தெனாகா நேசனல் பெர்ஹாட்டிற்கு சொந்தமான டிரம்ஸ்போர்மர் பறிமுதல் செய்யப்பட்டது. ஒதுக்குப்புறமான பகுதியில் சாலையோரத்திலுள்ள டிரன்ஸ்போர்மர்களை வெட்டி அதனை இழுப்பதற்கு அந்த சந்தேக நபர்கள் லோரியை பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. கைதான ஆறு சந்தேகப் பேர்வழிகளில் மூவர் இதற்கு முன் குற்றச் செயலில் ஈடுபட்ட பின்னணிகளை கொண்டவர்களாவர்.