
மலாக்கா, செப்டம்பர் -9 – மலாக்கா மிருகக்காட்சி சாலையில் தீனி தான் என நினைத்து, கைப்பேசியை யானை சேதப்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
வருகையாளர் ஒருவர் யானையை வீடியோ எடுக்க முயன்ற போது, கைப்பேசி தவறி யானையின் காலடியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கீழே கிடந்த கைப்பேசியை துதிக்கையால் எடுத்து யானை மடக்க, அது உடைந்த சத்தத்தை வீடியோவில் தெளிவாகக் கேட்க முடிகிறது.
திருப்பித் திருப்பிப் பார்த்ததில் அது உணவல்ல என்பதை அறிந்துகொண்ட யானை, அதை அங்கேயே போட்டு விட்டு, வருகையாளர்கள் சாப்பிடக் கொடுத்தவற்றை துதிக்கையால் வாங்குவதில் கவனம் செலுத்தியது.
வீடியோ எடுத்தவர் zoom செய்ததில், கைப்பேசி உடைந்து கீறல் விட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
வீடியோவைப் பார்த்த நெட்டின்சன்கள், “இங்கே கைப்பேசிகளுக்கு அனுமதியில்லை” என்பதை யானை சொல்லாமல் சொல்கிறது போலும் என நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.