
ஜோகூர் பாரு – மே 21- இன்று காலை, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான (UTM) பேருந்து தீ விபத்தில் சிக்கியது. அதிர்ஸ்டவசமாக அதில் பயணித்த பேருந்து ஓட்டுநர் உட்பட 6 மாணவர்களும் உயிர் தப்பினர்.
செய்தி அறிந்து தீயணைப்புத்துறை விரைந்து செயல்பட்டதால் தீயை உடனடியாக அணைக்க முடிந்ததாகவும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென்றும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராயவும் உள்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பலக்லைக்கழகம் தெரிவித்துள்ளது.