Latestஉலகம்மலேசியா

மலை ஏறுபவர்களின் கண்ணில் சிக்கிய RM1.2 மில்லியன் புதையல்!

பிராக் நியூ யார்க், மே 5- செக் குடியரசில் உள்ள மலையொன்றில், 300,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான புதையல் ஒன்றை கண்டெடுத்துள்ளனர் இரு மலையேறிகள். இது மலேசிய நாணயத்திற்கு 1.2 மில்லியன் ரிங்கிட்டாகும்.

அவர்கள் கண்டெடுத்த பெட்டியில், , மூக்குப்பொடிப் டப்பிகள், வளையல்கள், தோல்ப்பை, ஹேர் பிரஷ், நெக்லஸ், தங்கப் பொருட்கள் மற்றும் 598 தங்க நாணயங்கள் இருந்ததாக தொல்பொருள் துறை கூறியுள்ளது.அதில் உலோகப் பொருளும் இருந்தது.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் மதிப்புமிக்கவை என்றும் மீதமுள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கண்டுபிடிக்கப்பட்ட உலோகத்தின் தற்போதைய விலை சுமார் 340,000 அமெரிக்க டாலர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!