Latestமலேசியா

மாமன்னரும் பிரதமரும் ‘அசாம் பெடாஸ்’ சாப்பிட்டதும் ஜே.பி உணவகத்துக்கு அடித்த ‘ஜாக்போட்’

ஜோகூர் பாரு, டிசம்பர்-12 – ஜொகூர் பாருவில் மாமன்னரும் பிரதமரும் கடந்த திங்கட்கிழமை ‘அசாம் பெடாஸ்’ (Asam Pedas) சாப்பிட்ட உணவகத்திற்கு, அவ்விரு முதன்மைத் தலைவர்களின் வருகை பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது.

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் சேர்ந்து அந்த சீன உணவகத்தில் மதிய உணவுண்ட புகைப்படங்கள் முன்னதாக வைரலாகின.

இதையடுத்து ஒரே நாளில் புகழின் உச்சிக்குச் சென்ற அந்த உணவகத்தைத் தேடி, மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

டிக் டோக்கில் வைரலாகியுள்ள வீடியோவைப் பார்த்தால், உணவகத்தில் வழக்கத்திற்கு மாறாக அசாம் பெடாசை சுவைப்பதற்காக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சிறார் முதல் பெரியவர் வரை மூவின மக்களும் வரிசைப் பிடித்து நிற்கின்றனர்.

இந்நிலையில், வீடியோவின் கீழ் கருத்துப் பதிவிட்ட வலைத்தளவாசி ஒருவர், இப்படியே கூட்டம் கூடினால், கடையை வேறெங்காவது பெரிய இடம் பார்த்து மாற்ற வேண்டியது தான் என்றார்.

கடையில் சாப்பிட்ட kerapu emas goreng மீன் பதார்த்தமும் மிகவும் சுவையாக இருப்பதாக அவர் பாராட்டினார்.

ThePowerOfAgongaPM என்ற hashtag-சுகளும் வைரலாகியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!