Latestமலேசியா

முதலாம் ஆண்டு செல்லும் 6 வயது மாணவர்களுக்கு மதிப்பீட்டு சோதனை நடத்தப்படாது – அன்வார்

கோலாலம்பூர், ஜன 27 – 2027ஆம் ஆண்டு பள்ளி பருவம் தொடங்கி ஆறு வயதுக்குட்பட்ட முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் தகுதியை தீர்மானிக்கும் மதிப்பீடு சோதனை செயல்படுத்தப்படாது என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

முன்மொழியப்பட்ட மதிப்பீடு சோதனையை செயல்படுத்துவது உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் குழந்தைகள் மீது பாகுபாட்டை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் உட்பட, இந்த விவகாரம் குறித்து கவனமாக ஆராயப்பட்டதாக அவர் கூறினார்.

குழந்தைகள் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு புதிய மதிப்பீட்டு முறை இருப்பது முன்னோடி ஆலோசனையாக இருந்தது.

ஆனால் பின்னர் அது பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. முதல் வகுப்பில் நுழைய விரும்பும் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்கள் தகுதியற்றவர்கள், அவர்கள் புத்திசாலிகள் அல்ல, போன்ற பல உளவியல் விளைவுகள் ஏற்படலாம் என்பதால் மதிப்பீட்டு சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.

இந்த மதிப்பீடு சோதனை கல்வி அமைச்சரின் முன்மொழிவு, அதை ரத்து செய்து எளிமைப்படுத்த வேண்டும் என்பதில் தாம் உடன்படுவதாக இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேர அமர்வின் போது அன்வார் தெரிவித்தார்.

மதிப்பீடு இல்லாததால் கண்காணிப்பு அம்சம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல, மாறாக குழந்தைகளின் தயார்நிலை மற்றும் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அன்வார் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!