
பினாங்கு, மே 16- பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம், முன்னாள் பினாங்கு ஆளுனர், துன் டத்தோ’ஸ்ரீ உத்தாமா அஹ்மத் ஃபுஸி பின் ஹாஜி அப்துல் ரசாக்கின் (Tun Dato’ Seri Utama Ahmad Fuzi bin Haji Abdul Razak) சேவையைக் நினைவுக்கூறும் வகையில் இரவு உணவு விருந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது.
துன் தனது பதவிக்காலத்தில் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு வழங்கிய மகத்தான ஆதரவிற்கு, நன்றி செலுத்தும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்த வாரிய வருவாய், மேம்பட்ட கோயில் மேலாண்மை, வலுப்படுத்தப்பட்ட கல்வி முயற்சிகள் மற்றும் நலத்திட்டங்கள் போன்றவற்றை அறப்பணி வாரியத்தின் முக்கிய வளர்ச்சி என அதன் தலைவர் RSN ராயர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய துன் Ahmad Fuzi, திறமையான தலைமையின் கீழ் வாரியம் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில் துன் மற்றும் தோ புவான் ஆகியோருக்கு பினாங்கு அறப்பணி வாரியம் உலமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இருவருக்கும் நல்லாரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட, நிறைவான வாழ்க்கைக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டது.
Penang Hindu Endowments Board ,hosts, appreciation, dinner, honour, former Governor, Tun Ahmad Fuzi,