Latest

மூத்த இராணுவ அதிகாரியின் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லத்தில் MACC சோதனை

கோலாலம்பூர், டிசம்பர் 29 – மலேசிய இராணுவத்தின் கொள்முதல் செயல்முறைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மூத்த இராணுவ அதிகாரி ஒருவரின் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC சோதனை நடத்தியுள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த அதிகாரியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வைத்திருந்த ஆறு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

விசாரணையுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை கைப்பற்றுவதற்காக MACC அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதோடு
மேலும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!