Latestமலேசியா

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, ஜூன் 26 – துணை குத்தகையாளர் நிறுவனத்தின்
இயக்குனர் ஒருவரிடருந்து 10 ஆண்டுகளுக்கு முன் லஞ்சமாக Range Rover Sport வாகனத்தை பெற்றதாக மலாக்கா மாநில சட்டமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகர் மீது இன்று ஆயர் கெரோவிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி Elesabet Paya Wan முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின் 61 வயதுடைய டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட் ( Mohamad Ali Mohamad ) அதனை மறுத்தார். மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான முகமட் அலி மற்றொரு நிறுவனத்தின் இயக்குநரான டத்தோ பிரமுகரிடமிருந்து MCR 2 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனத்தை லஞ்சமாக பெற்றதாக கூறப்பட்டது.

Taman Kota Syabandar ரிலுள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 16 (a) (A ) பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு மீண்டும் ஆகஸ்டு 14ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

கடல் மீட்பு திட்டத்திற்காக 235,000 ரிங்கிட் மற்றும் மூன்று ஆடம்பர கார்களை லஞசமாக பெற்றது தொடர்பில் ஏற்கனவே ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜூன் 18ஆம்தேதி கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை முகமட் அலி மறுத்திருந்தார். அந்த குற்றத்திற்காக அவருக்கு 60,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு ,அவரது கடப்பிதழ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!