Latestஉலகம்மலேசியா

லாஸ் ஏஞ்சலஸில் மோசமடையும் கள்ளக் குடியேறிகளின் போராட்டத்தைச் சமாளிக்க 700 கடற்படையினரை துணைக்கு அனுப்பிய டிரம்ப்

கலிஃபோர்னியா, ஜூன்-10 – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குடிநுழைவுச் சோதனை எதிர்ப்புப் போராட்டங்கள் மோசமடைந்திருப்பதால், தேசியக் காவல் படைக்குத் துணையாக 700 கடற்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக பாதுகாப்புப் படையினருடன் மல்லுக்கட்டுவதால், அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதலில் அமைதி மறியலாக இருந்த அப்போராட்டம் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டதால் சினமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், Metropolitan தடுப்பு மையத்திற்கு அருகிலும் சாலைகளிலும் குவிந்தனர்.

போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைப்பது உள்ளிட்ட வன்முறைகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதால், லாஸ் ஏஞ்சலஸ் மாநகரமே கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.

ஞாயிறு வரை 10 பேர் கைதான நிலையில், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் இரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியும் பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்.

மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து அதிபர் டோனல்ட் டிரம்ப், கள்ளக் குடியேறிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அவ்வகையில் லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் சட்ட விரோத குடியேறிகளைக் கடந்த வெள்ளியன்று குடிநுழைவு அதிகாரிகள் கைதுச் செய்தனர்.

இதனைக் கண்டித்தே லாஸ் ஏஞ்சலஸில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

எனினும் கலிஃபோர்னியா மாநில அரசுக்கும் டிரம்ப் நிர்வாகத்துக்கும் இதில் பெரும் கருத்து முரண்பாடு நிலவுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க டிரம்ப் காவலர் துருப்புகளைப் பயன்படுத்தியதை எதிர்த்து, கலிஃபோர்னியா அரசாங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!