Latestமலேசியா

வாடகை செலுத்தாத குடியிருப்பாளர்கள்; DBKL-இன் அதிரடி நடவடிக்கை

கோலாலும்பூர், மே 20- கோலாலும்பூர் ஊராட்சி மன்றத்தின் (DBKL) குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாததை தொடர்ந்து, DBKL அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றது என்று மேயர் மைமுனா முகமது ஷெரீப் (Maimunah Mohd Sharif) கூறியுள்ளார்.

மேலும், DBKL பட்டியலின் படி, 26 ஆண்டுகளுக்கு மேற்பட்டு, இன்னும் வாடகை செலுத்தாதவர்கள் இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

இச்சூழலை களைவதற்கு DBKL தக்க நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதோடு, B40 குடும்பங்களுக்கு இதை பற்றிய தகவல்களை முன்னதாகவே தெரியப்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், DBKL குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள், தாங்கள் செலுத்த தவறிய வாடகைகளை உடனடியாக செலுத்த முயற்சிக்க வேண்டுமென்றும், கேள்விகளுக்கு DBKL-ஐ அணுகவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!