Latestமலேசியா

பிரசவத்திற்காக மனைவி மருத்துவமனையில், வீட்டில் 6 வயது மகளை கற்பழித்த கொடூர தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

தாவாவ், ஆகஸ்ட்-8 – சபாவில் மனைவி பிரசவத்திற்காக மருத்துவனையில் இருந்த போது வீட்டில் 6 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு, தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு மீனவனான 43 வயது அவ்வாடவன், குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.

சிறைவாசம் முடிந்ததும், 3 ஆண்டுகளுக்கு முழு போலீஸ் கண்காணிப்பில் இருப்பதோடு, மனோவியல் ரீதியிலான ஆலோசனைச் சேவைகளைப் பெறுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

2014-ஆம் ஆண்டு செம்போர்னாவில் உள்ள வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஐந்தாவது பிள்ளையை பிரசவிக்க மனைவி மருத்துமனையில் இருந்த போது இந்தக் கொடூரத்தை அவ்வாடவர் புரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!