Latestஉலகம்

வான்பகுதி மூடப்பட்டதால் துபாய் புறப்பட்ட பாத்தேக் ஏர் விமானம் மீண்டும் கே.எல்.ஐ.ஏ திரும்பியது

கோலாலம்பூர், ஜூன் 24 – இன்று அதிகாலை துபாய்க்குச் சென்ற
Batek ஏர் விமானம் அதன் திட்டமிடப்பட்ட பாதையில் செல்ல முடியாமல் போனதால்,KLIA அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திற்குத் மீண்டும் திரும்பியது. மத்திய கிழக்கில் நடந்து வரும் நிலைமைகள் காரணமாக கத்தார் ( Qatar) மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் வான்வெளி மூடப்பட்டதால் இதனால் Batek
Air OD713 விமானம் பாதிக்கப்பட்டது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்துலக விமானப் பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதை கட்டுப்பாடுகளின் முழு இணக்கத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புதான் Batek Air ஏர் நிறுவனத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என அந்நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. KLIA வந்தவுடன், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிடம், உணவு மற்றும் தரைவழி போக்குவரத்து உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விமானம் ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகள் முழு பணத்தைத் திரும்பப் பெற்று தங்கள் முன்பதிவை ரத்து செய்யலாம் அல்லது அடுத்த கிடைக்கக்கூடிய விமானத்தில் மீண்டும் முன்பதிவு செய்யலாம்” என்று அது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதனிடையே வர்த்தக விமான சேவைகளுக்காக கட்டார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு வான் வெளிப் பகுதிகளை மீண்டும் திறந்தால் துபாய்க்கான விமானச் சேவை நாளை புதன்கிழமை மீண்டும் தொடங்கும் என Batik Air தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!