
பெட்டாலிங் ஜெயா, மே 26 – ஆரம்பப்பள்ளி மாணவர் ஒருவரை, பள்ளி ஆசிரியர்கள் சிற்றுண்டிச்சாலையில் அவமானப்படுத்தி திட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகிய நிலையில், கல்வி அமைச்சு இச்சம்பவம் குறித்து தீர விசாரிக்கும் என்று மலேசிய கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறியுள்ளார்.
தான் செய்யாத தவற்றிற்காக ஆசிரியர்களிடம் கடுமையாக திட்டு வாங்கும் காணொளி புலனத்தின் வாயிலாக அம்மாணவியின் தாயாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஆசிரியர்களின் நேர்மை மற்றும் நெறிமுறைகளோடு தொடர்புபடுத்தியிருப்பதால், கல்வி இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென ஃபத்லினா கேட்டுக்கொண்டார்.
மேலும் கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் நேர்மையோடும் நெறிமுறைகளோடும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.