Latestமலேசியா

வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் நுழைவு அனுமதி மலேசியர்களை பாதிக்காது – உள்துறை அமைச்சர்

கோலாலம்பூர், பிப்ரவரி 26-வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நுழைவு அனுமதி (permit masuk), உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் நலன்களைப் பாதிக்காது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதி சாதாரணமாக யாருக்கும் வழங்கப்படாது என்றும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்யும், தொழில்முறை தகுதி மற்றும் சிறப்பு திறன் கொண்ட நபர்களுக்கே இது வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களின் நிபுணத்துவம் நாட்டின் உயர்தாக்கம் கொண்ட துறைகளுக்கு பயன் அளிப்பதுடன், உள்ளூர் பணியாளர்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.

இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவு கிடைக்கிறது.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2013 முதல் 2023 வரை நிலுவையில் இருந்த 19,205 விண்ணப்பங்களில் 15,081 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு முறையீடு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

2020 முதல் 2024 வரை கிடைத்த 5,628 முறையீடுகளில் 98 விழுக்காடு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள முறையீடுகளும் இவ்வாண்டுக்குள் முடிக்கப்பட உள்ளன.

புதிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, மலேசிய குடிமகனைத் திருமணம் செய்துள்ள வெளிநாட்டு மனைவிகள் நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய திருமண கால நிபந்தனை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறைமை கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த முறைமை கையால் செய்யும் செயல்முறைகளை குறைத்து, சேவை வழங்கலை மேலும் விரைவாகவும் வெளிப்படையாகவும் மாற்றும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!