Latestஉலகம்மலேசியா

ஹைதராபாத்தில் மின்னல் தாக்கி அறுவர் மரணம்; 10 பேர் படுகாயம்

ஹைதராபாத் – ஜூன் 13 – நேற்று, ஹைதராபாத் அடிலாபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்தினத்தன்று கனத்த மழை பெய்து ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டு விவசாயிகளும் அப்பகுதி மக்களும் தஞ்சம் புகுந்த போது குடிசைகளில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கி இறந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த 10 பேர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புயல்களின் போது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மரங்கள், மின் கம்பங்கள் அல்லது வேறு எந்த கட்டமைப்புகளின் கீழும் தஞ்சம் அடைவதைத் தவிர்க்குமாறு மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!