Latestமலேசியா

120,000 ரிங்கிட் மதிப்பிலான சில்லுகள் திருடு; கிடங்கு முன்னாள் ஊழியர் கைது

ஜோர்ஜ்டவுன், மே-1, பினாங்கு, பாயான் லெப்பாஸ் சுயேட்சை தொழில்துறை மண்டலத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு மின்னியல் நிறுவனத்திற்குச் சொந்தமான 120,000 ரிங்கிட் மதிப்பிலான PMU0123 சில்லுகளைத் திருடியதற்காக, கிடங்கொன்றின் முன்னாள் பணியாளர் கைதாகியுள்ளார்.

26 வயது அந்நபர் தெலுக் கும்பார் போலீஸ் நிலையத்தில் கைதானார்.

அந்நிறுவனம் உள் தணிக்கை நடத்தி, CCTV கேமரா பதிவையும் பரிசோதித்து பார்த்ததில், அவ்வாடவர் சந்தேகத்திற்குரியவராக தெரிந்துள்ளார்.

இந்நிலையில், நிறுவனத்தின் கிடங்கிலிருந்து 8 சில்லுகளைத் திருடி, அவற்றை அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் பேருந்து நிறுத்துமிடத்தில் அவர் விற்றிருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவரிடமிருந்து iPhone 12 Pro Max கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து சில்லுகளை வாங்கிச் சென்ற நபர் தேடப்படுகிறார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!