Latestமலேசியா

ஈப்போ பேரங்காடியில் நகைக்கடையில் ஆயுதம் ஏந்திய இருவர் கொள்ளை

ஈப்போ, மே 9 – ஈப்போ Falimல் பேரங்காடியிலுள்ள நகைக்கடையில் ஆயுதம் ஏந்திய இரு ஆடவர்கள் நகைகளை கொள்ளையிட்டனர். இந்த பரபரப்பான கொள்ளை சம்பவம் இன்று மதியம் மணி 1.30 அளவில் நடந்தது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸ் தடயயியல் குழுவினர் இன்று மாலை 4 மணி வாக்கில் கொள்ளை நடந்த கடையின் உள்ளே விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு மற்றும் சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் காணும் பணிகளில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!