
கோலாலம்பூர், ஜூன் 17 – ( Smart Bikers) ஸ்மார்ட் பைக்கர்ஸ், இன்று சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தங்களது துணிச்சலான பயணத்தை தொடங்கினர்.
ஸ்மார்ட் பைக்கர்ஸ் குழுவைச் சேர்ந்த 13 பேர் இன்று காலை பத்து மலைத் திருத்தலத்தில் திருமுருகன் கோவிலில் இருந்து பயணத்தைத் தொடங்கினர். MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.பி புனிதன் கொடியசைத்து இந்த பயணத்தை தொடக்கிவைத்தார்.
MIPPயின் தகவல் பிரிவின் தலைவர் டத்தோ சதீஸ், ஷேடோஃபாக்ஸின் நிறுவனர் டத்தோ ஆனந்த், லெஜென்டாரி ரைடர்ஸ் தலைவர் மகேந்திரமணி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மலேசியா, தாய்லாந்து, லாவோஸ் முதல் சீனா வரை 17 நாட்களில் 8,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை இந்தப் பயணம் உள்ளடக்கும். இந்த சாகசத்தை கிளப்பின் தலைவர் டத்தோ’ பாலா முருகன் வழிநடத்துகிறார்.
இந்த பயணத்தின் தொடக்க விழாவில் மலேசியாவில் செயல்படும் பெரிய இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிள் குழுவினர்களும் கலந்துகொண்டு ஸ்மார்ட் பைக்கர்ஸ் குழுவினரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.