
தைப்பே, ஜூன் 12 – இன்று ரெக்டர் கருவியில் 5.9 அளவில் பதிவான நில நடுக்கம் தைவானை உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தினால் தைவான் தலைநகரம் தைப்பேயில் சில கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதாக ஏ.எப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர். Hualien நகரின் தெற்கே 71 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிழக்குக் கரையில் 31 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வின் அறிக்கை தெரிவித்தது. எனினும் கட்டிடங்கள் சேதமடைந்தது தொடர்பான உடனடி அறிக்கை எதுவும் கிடைக்கவில்லையென தைவான் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.