
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12,
காஜாங் EKVE நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டர் சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டிருந்த 27 வயது இளைஞர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் நண்பர்களுடன் அவர் அந்த சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டார்.
EKVE-யின் 13-ஆவது கிலோ மீட்டரை கடக்கும் போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் சாலையில் மயங்கி விழுந்ததால் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு அம்பாங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.
மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய ஆய்வுக் கூட அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது.
அதுவரை திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.