Latestமலேசியா

6 வயதில் முதலாம் வகுப்பு விருப்ப அடிப்படையிலேயே; கவலைகளை விட நன்மைகளே அதிகம் – அன்வார்

கெப்பாளா பாத்தாஸ், ஜனவரி-25 – 6 வயது குழந்தைகள் அடுத்தாண்டு முதல் விருப்பத்திற்கேற்ப முதல் வகுப்பில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள், சவால்களை விட அதிகமாகும்.

எனவே, அதனை எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கக் வேண்டாம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றில் 6 வயதிலேயே பள்ளிக் கல்வித் தொடங்குகிறது.

மலேசியாவும் தற்போது அதே நடைமுறையை பின்பற்றவிருப்பதாக அவர் சொன்னார்.

5 வயதில் பாலர் கல்வி தொடங்குவதால், குழந்தைகள் முதல் வகுப்பிற்கு தயாராகும் என்றார் அவர்.

குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் மிகவும் திறமையான கற்பவர்களாக மாற முடியும்; இது நாட்டை உயர்த்த உதவும் என அவர் கூறினார்.

அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ரீதியாகத் தயாரான குழந்தைகளுக்கே 6 வயதில் முதல் வகுப்பில் சேர அனுமதி வழங்கப்படும் என கல்வி அமைச்சும் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆனால் எதிர்ப்பாளர்களோ, ஆசிரியர் பற்றாக்குறை, கலாச்சாரக் கவலைகள், மற்றும் வயது கலந்த வகுப்புகள் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!