Latestமலேசியா

60 ஆண்டுகளாக குடியிருந்த வீடுகளை உடைப்பதா? கம்போங் ஜாவா 4ஆவது மைல் குடியிருப்பு வாசிகள் போர்க்கொடி

கிள்ளான் – ஜூன் 12- 60 ஆண்டு காலமாக நிலப்பட்டாவை வாங்கி
அதில் சொந்தமாக வீடுகள் கட்டிக்கொண்டு குடியிருந்துவரும்  தங்களின் வீட்டை உடைக்கப்போவதாக மிரட்டிவரும் மேற்குக்கரை நெடுஞ்சாலை நிறுவனத்திற்கு எதிராக கிள்ளான், கம்போங் ஜாவா 4ஆவது மைலில் குடியிருக்கும் மக்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். சாலை நிர்மாணிப்பிற்காக தங்களது நிலம் எடுத்துக்கொள்ளப்பட்டதால் வெளியேறும்படி அந்த நிறுவனம் கோரிக்கை எழுப்பியிருப்பது நியாயமற்ற ஒன்று என ஒரே நிலப்பட்டாவைக் கொண்ட நிலத்தில் தங்களது வீடுகளை கட்டிக்கொண்டு குடியிருந்துவரும் பாதிக்கப்பட்ட 25 குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இன்று கம்போங் ஜாவாவில் பாதிக்கப்பட்ட மக்களை வணக்கம் மலேசியா சந்தித்தபோது அவர்கள் தங்களது கவலையை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ வி.குணாளன், கோத்தா ராஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் , ம.இ,கா ஊடாக பிரிவுத் தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்ரமணியம் , பிபிபி கட்சியின் சிலாங்கூர் தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

எங்களது வீட்டிற்கும் நிலத்திற்கும் இழப்பீடு கொடுப்பதாக சம்பந்தப்பட் மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி அளித்தது. ஆனால் பேசியடி அவர்கள் நடந்துகொள்ளவில்லை. இந்த வேளையில் இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதோடு எதிர்வரும் ஆகஸ்டு இது தொடர்பான விசாரணை நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் திடீரென மேம்பாட்டு நிறுவனம் இங்குள்ள 4 வீடுகளை உடைத்திருப்பது குறித்தும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்,

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தங்களது ஆதங்கத்தையும் வேதனையையும் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர். எந்தவொரு நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக இருக்கவேண்டும் .அதைவிடுத்து தற்போது வீடுகளை காலிசெய்து ,வெளியேறும்படி
சம்பந்தப்பட்ட கட்டுமான கோரிக்கை எழுப்புவது எந்த வகையில் நியாயம் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!