
ஜோகூர் பாரு, ஜனவரி-9 – ஜோகூர் பாசீர் கூடாங்கில் 7 வயது சிறுவனை கொலை செய்ததாக 55 வயது மாது மீது மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 29 இரவு 7.30 மணிக்கும் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கும் இடைபட்ட காலத்தில், தாமான் கோத்தா மாசாயில் உள்ள வீட்டொன்றில் Muhammad Aswad Muhammad Fairuz-சை படுகொலை செய்ததாக, ஒரு வியாபாரியான Saniah Osman குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், அவரின் குற்ற வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
அம்மாதுவுக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம், மார்ச் 9-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது குறைந்தது 30 ஆண்டுகள் அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.



