
ஷா ஆலாம், அக்டோபர்-22 – செத்தியா ஆலாமிலிருந்து ஷா ஆலாம் நோக்கிச் செல்லும் NKVE நெடுஞ்சாலையின் 4.4-வது கிலோ மீட்டரில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில், 3 வாகனங்கள் தீப்பற்றிக் கொண்டன.
அதில் 2 Sedan ரக கார்கள் முழுவதுமாக எரிந்து போன நிலையில், 4 சக்கர வாகனம் 50 விழுக்காடு சேதமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
சம்பந்தப்பட்ட 3 காரோட்டிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
நெடுஞ்சாலையின் நடுப்பாதையிலும் வலப்புறத்திலும் விபத்து ஏற்பட்டதால் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.