Latestமலேசியா

அரசியல் நிலைத்தன்மையைக் கட்டிக் காக்கும் தூண்; தேசிய முன்னணிக்கு பினாங்கு அமைச்சர் புகழாரம்

ஜோர்ஜ்டவுன், நவம்பர் 16 – பினாங்கு தண்ணீர் மலை ஆலயத்திற்கு வருகின்ற வயதானவர்களின் நலன் கருதி அங்கு மின் தூக்கி வசதி அமைக்கப்பட வேண்டும் என்ற பினாங்கு மாநில இந்து அறப்பணி மன்றத்தின் பரிந்துரையை ஏற்று மாநில அரசாங்கம் அத்திட்டத்தை சீர்தூக்கி பார்த்து அதனை செய்து தர வேண்டும் என்று பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜே.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவார் என நேற்றிரவு நடைபெற்ற பினாங்கு ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் உரையாற்றிய போது தினகரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட பினாங்கு முதல் அமைச்சர் Chow Kon Yeow கடந்த ஈராண்டுகளாக மத்திய அரசாங்க அளவிலும் மாநில அளவிலும் அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதில், தேசிய முன்னணி முக்கியத் தூணாக விளங்கி வருவதாக புகழாரம் சூட்டினார்.

ம.இ.கா உள்ளிட்ட தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளுக்கும் அதில் பெரும் பங்குண்டு.

குறிப்பாக 2023 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைப்பதில் அவை தோள் கொடுத்திருப்பதாக Chow Kon Yeow சொன்னார்.

பக்காத்தான் ஹாராப்பான், தேசிய முன்னணி மற்றும் சபா சரவாக் கட்சிகளின் நெருங்கிய ஒத்துழைப்பு, ஒற்றுமை அரசாங்கத்தை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது.

இதன் மூலம் மக்கள் நலப் பணிகளை அரசாங்கம் எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முதல் அமைச்சர் சொன்னார்.

கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மாநில ம.இ.கா அந்த தீபாவளி உபசரிப்பை நடத்திய நிலையில், பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜே.தினகரனும் கட்சி நிர்வாகிகளும், Chow Kon Yeow-வின் 65-வது பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கினர்.

பினாங்கு முன்னாள் முதல்வரும் DAP தேசியத் தலைவருமான லிம் குவான் எங் உள்ளிட்ட பிரமுகர்களும் அதில் கலந்து சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!