Latestமலேசியா

முகதூலில் மலிவான விலையில் பால் மாவு விளம்பரம்; வர்த்தகர் RM14,000 மேல் இழந்தார்

ஜெம்போல், டிச 2 – முகநூலில் பால் மற்றும் மாவு மலிவான விலையில் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி வர்த்தகர் ஒருவர் மோசடிக்கு உள்ளாகி 14,274 ரிங்கிட்டை இழந்தார். பாதிக்கப்பட்டவர் விற்பனையாளராக இருந்ததால் மலிவு விலையில் வெளிவந்த விளம்பரத்தில் அதிக ஆர்வம் காட்டிஏமாந்துள்ளார் என ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் Superintedan ஹூ சாங் ஹூக் ( Hoo Chang Hook ) தெரிவித்தார். சமூக வலைத்தளத்தின் வெளிவந்த விளம்பர செயலியில் தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்குகள் விவரங்களையும் அவர் வழங்கியுள்ளார்.

அதன் பின் அவரது e -wallet உட்பட பல்வேறு வங்கிக் கணக்கிலிருந்து நான்கு முறை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்ற பரிவர்த்தனை குறித்து வங்கியிலிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் தனது கணக்கில் பணம் குறைந்ததை கண்டதாக Hoo கூறினார். இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!