Latestஉலகம்

கினி நாட்டில் கால்பந்தாட்டத்தின் போது இரசிகர்களிடையே வெடித்த வன்முறை; 100 பேர் பலி

கோனாக்ரி, டிசம்பர்-3 – மேற்கு ஆப்ரிக்க நாடான கினியில் (Guinea) கால்பந்தாட்டத்தின் போது இரசிகர்களிடையே ஏற்பட்ட சண்டையில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான Nzerekore-வில் ஞாயிறன்று உள்ளூர் அணிக்கும் Labe அணிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தின் போது இரசிகர்கள் மத்தியில் வெடித்த மோதல் வன்முறையாக மாறியது.

Labe அணியின் 2 ஆட்டக்காரர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கிய நடுவர், எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பையும் வழங்கியதே சண்டை மூண்டதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆத்திரத்தில் பொது சொத்துக்களைச் சேதப்படுத்திய இரசிகர்கள் ஒரு போலீஸ் நிலையத்தையே தீ வைத்துக் கொளுத்தினர்.

இடமே கலவர பூமியாகி ஏராளமானோர் சுவர் ஏறி குதிக்கும் காட்சிகளும் வைரலாகியுள்ளன.

வன்முறையின் போது பலர் கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது.

2021-ல் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்து தன்னைத் தானே அதிபராக அறிவித்துக் கொண்ட இராணுவத் தளபதி மமதி டூம்பூயாவுக்கு (Mamady Doumbouya) மரியாதை செலுத்தும் வகையில், அந்த கால்பந்தாட்டம் நடத்தப்பட்டது.

மரண எண்ணிக்கைக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லையென்றாலும், சம்பவ இடத்திலிருந்த மருத்துவர் ஒருவர் கொடுத்த தகவலின் படி உயிரிழப்பு நூறு பேரைத் தாண்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!