![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/h.jpg)
புத்ரா ஜெயா, ஜன 6 – சாலைப் போக்குவரத்துத் துறை தனது அமலாக்க அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு முதல் அவர்களது சீருடையில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
குறிப்பாக கனரக வாகனங்களை உள்ளடக்கிய அமலாக்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும், சாலையைப் பயன்படுத்துபவர்களின் வாய்மொழி துஷ்பிரயோகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்கவும் சீருடைகளில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துத் துறை தலமை இயக்குனர் டத்தோ ஏடி பேட்லி ரம்லி (Datuk Aedy Fadly Ramli) கடந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது உடலில் ஆடைகளில் பொருத்தும் கேமராக்களை வாங்குவதற்கு உடனடி நிதியுதவி வழங்குமாறு கோரியிருந்தார்.
முடிந்தவரை விரைவில் நிதியைப் பெறுவதற்கு நிதி அமைச்சருடன் போக்குவரத்து அமைச்சு விவாதிக்கும் என்று அமைச்சின் புத்தாண்டு ஆணையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.