Latestமலேசியா

கோலாலம்பூர் கோபுரம் நாளை முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும்

கோலாலம்பூர், ஏப் 25- கோலாலம்பூர் கோபுரம் (KL Tower ) நாளை ஏப்ரல் 26 ஆம்தேதி காலை 9.00 மணி முதல் பொதுமக்கள் வருகைக்காக மீண்டும் திறக்கப்படும். பார்வையாளர்களுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதோடு மட்டுமின்றி , சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான Madani அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டிற்கு இணங்க இது இருப்பதாக தொடர்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மெனாரா KL இன் செயல்பாடுகள் LSH Service Master Sdn. Bhd என்ற புதிய நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும். LSH சர்வீஸ் மாஸ்டர் Sdn. Bhd. தலைமையிலான மெனாரா KL வளாகத்தின் புதிய நிர்வாகத்தின் மூலம், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் , பாதுகாப்பு, தொடர்ச்சியான மேம்பாடுகளுடன் திறமையான, வாடிக்கையாளர் சார்ந்த சேவை வழங்கலை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என தொடர்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!