Latest

பெர்லிஸில் நண்பர்களுடன் ஆற்றில் விளையாடியப் போது துயரம்; 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி

கங்கார், நவம்பர்-1,

குவாலா பெர்லிஸ், பாடாங் பெசார் செலாத்தானில் ஆற்றில் குளித்து விளையாடிய போது, 2 சிறுவன்கள் நீரில் மூழ்கி பலியாயினர்.

நேற்று மாலை 4 மணியளவில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

5 நண்பர்கள் ஆற்றில் விளையாடியதில், மூவரை கிராம மக்கள் காப்பாற்றினர்.

எனினும் 8 வயது Iskandar Zulkarnain Mohd Faizal, 10 வயது Mohd Yuhanis இருவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி மாண்டனர்.

சடலங்கள், சவப்பரிசோதனைக்காக கங்கார் துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.

காப்பாற்றப்பட மூவரில் ஒரு சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!