
சிகமாட், மார்ச் 24-பட்டாசுகளை வெடித்தபடி ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் நபரின் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அந்நபரை போலீஸ் தீவிரமாக தேடிவருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 10.30 க்கு , ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையின் 185வது கிலோமீட்டரில், யமஹா RXZ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக செகமாட் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் Superintendan எம் . நந்தா கூறினார்.
இது தொடர்பாக, ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், 07-9325811 என்ற எண்ணில் செகாமட் போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு தகவல் தருவதற்கு உதவ முன்வருமாறு இன்று வெளியிட்ட அறிக்கையில் நந்தா கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்தை போலீஸ் கடுமையாக கருதுவதோடு விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபரை தீவிரமாக தேடிவருவதாக அவர் தெரிவித்தார்.



