Latestமலேசியா

KLIA-வில் 3 வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் கைது; AKPS அதிரடி

செப்பாங், ஆகஸ்ட்-13 – KLIA 1 விமான முனையத்தில் பிச்சையெடுத்து வந்ததாக நம்பப்படும் 3 வெளிநாட்டு ஆடவர்கள், நேற்றைய ‘Ulat KLIA’ சோதனை நடவடிக்கையில் கைதாகினர்.

அவர்களில் இருவர் அல்ஜீரிய நாட்டவர்கள், இன்னொருவர் ஈரானியர்.

சுற்றுலா விசாவில் வந்து, KLIA-வில் அவர்கள் பிச்சையெடுப்பது கண்டறியப்பட்டது.

மூவரும் மேல் விசாரணைக்காக சிலாங்கூர் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சுற்றுலா நுழைவைத் தவறாகப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, இந்நாட்டின் நற்பெயரைக் கெடுப்பதுடன் விமான நிலையத்தில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக AKPS அறிக்கையொன்றில் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!