
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-27, பினாங்கு, ஜெலுத்தோங் அருகே, லெபோ தெங்கு குடின் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியிலிருந்து, 4 வயது சிறுவன் தவறி விழுந்து படுகாயமடைந்தான்.
சனிக்கிழமை காலை 9.20 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
ஏழாவது மாடியின் காங்கிரீட் கூரையில் பேரன் விழுந்த போது, அவனது 63 வயது பாட்டி குளியறையில் இருந்துள்ளார்.
வீட்டின் முதன்மை படுக்கையறையில் கண்ணாடிக்கு அருகில் போடப்பட்டிருந்த கட்டிலிலிருந்து சிறுவன் விழுந்திருப்பது போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
படுகாயமடைந்த சிறுவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.
2001 சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.