Latestமலேசியா

MH370 விமானத்தைத் தேடும் நடவடிக்கை டிசம்பர் 30-ல் மீண்டும் தொடங்குகிறது

கோலாலாம்பூர், டிசம்பர்-3 – மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் நடவடிக்கை டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனம் இந்த தேடலை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

“கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்” என்ற ஒப்பந்தத்தின் கீழ், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே $70 மில்லியன் வழங்கப்படும்”

இந்தத் தேடல், இந்தியப் பெருங்கடலில் 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நடைபெறும்.

55 நாட்கள் இடைவிடாமல் தேடுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MH370 விமானம் 2014 மார்ச் 8-ஆம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்டபோது காணாமல் போனது; அதில் 239 பயணிகள் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிம்மதி அளிக்க மலேசிய அரசு உறுதியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

MH370 காணாமல் போனது உலக வான் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!