Latestமலேசியா

PLKN-ல் கலந்து கொள்ளாதவர்களுக்கு MLKN மன்னிப்பு வழங்கும்

கோலாலும்பூர், ஜூன் 24- 2024 ஆம் ஆண்டு தேசிய சேவை பயிற்சியில் (PLKN) கலந்துக்கொள்ளாத இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் தேசிய சேவை பயிற்சி கவுன்சில் (MLKN) மன்னிப்பு வழங்கியுள்ளது.

தேசிய சேவை பயிற்சிச் சட்டத்தின் அடிப்படையில், உண்மையில் PLKNல் கலந்து கொள்ளாதவர்களுக்கு 3,000 ரிங்கிட்டுக்கு மிகாமல் அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென்று MLKN தலைவர் டான் ஸ்ரீ அப்துல் அஜீஸ் ஜைனல் கூறியுள்ளார்.

இருந்தபோதும் PLKN-ல் கலந்து கொள்ளாத இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம் தனது தரப்பு இன்னும் சகிப்புத்தன்மையுடன் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

2026 ஆம் ஆண்டு தொடங்கி, எந்த காரணமும் இல்லாமல் PLKN-ல் கலந்து கொள்ளாத இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அஜீஸ் அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!