Latestமலேசியா

RM1 மில்லியன் போதாது: உயர் சேமிப்புள்ள சந்தாத்தாரர்களுக்கு ஜனவரி 1 முதல் EPF பண மீட்பில் கட்டுப்பாடு

கோலாலம்பூர், ஜனவரி-2 – ஊழியர் சேமநிதி வாரியமான EPF கணக்கில் 1 மில்லியன் சேமிப்பு வைத்திருப்பது, இனி கூடுதல் பணத்தை எடுக்க அனுமதி அளிக்காது.

ஜனவரி 1 முதல் இப்புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

RIA எனப்படும் போதுமான ஓய்வூதிய வருமான கட்டமைப்பின் கீழ், ஓய்வூதிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், EPF 3 நிலை சேமிப்பு அளவுகோலை அறிமுகப்படுத்தியுள்ளது:

அதாவது, RM390,000 அடிப்படை சேமிப்பு, RM650,000 போதுமான சேமிப்பு, RM1.3 மில்லியன் மேம்படுத்தப்பட்ட சேமிப்பு ஆகும்.

அவ்வகையில், 55 வயதுக்குக் குறைவான உறுப்பினர்களுக்கு, கூடுதல் பணம் எடுக்கும் வரம்பு இவ்வாண்டு RM1.1 மில்லியனாகவும், 2027-ல் RM1.2 மில்லியனாகவும் 2028-ல் RM1.3 மில்லியனாகவும் உயர்த்தப்படும்.

இந்த நடவடிக்கை 2026 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இது gig தொழிலாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் போன்றோருக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!