
கோலாலம்பூர், மே 29 – கடந்த மே 14ஆம் தேதி, கோம்பாக்கிலுள்ள கார் கிடங்கொன்றில், 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான போதைப்பொருட்களை வைத்திருந்த வாகன விற்பனையாளர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான அந்த நபர் வைத்திருந்த 212 ஷாபு பிளாஸ்டிக் பொட்டலங்களும், 11,348 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் அரிஃபின் முகமது நசீர் (Noor Ariffin Mohamad Nasir) தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.