
கோலாலம்பூர், ஜன 20 – SPE எனப்படும் Setiawangsa – Pantai நெடுஞ்சாலையில் Jalan Chan Sow linனில் Ceramic Pro தொழிற்சாலைக்கு அருகே டிரெய்லர் லோரி
கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரும் உதவியாளரும் மரணம் அடைந்தனர்.
நேற்றிரவு மணி 8.55க்கு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் Pudu தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காங்கிரிட் (konkrit) தடுப்பு கல்லை மோதிய பின் அந்த டிரெய்லர் லோரியிலிந்த ஓட்டுநரும் உதவியாளரும் நெடுஞ்சாலையில் கீழே விழுந்தததால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக தீயணைப்பு நிலைய அதிகாரி நுNur Zahela Mohamad Zainal தெரிவித்தார்.



