Latestமலேசியா

உளு கிள்ளான் பெட்ரோல் நிலைய கழிவறையில் கைப் பை திருட்டு  – கைது

அம்பாங் ஜெயா, ஏப்ரல் 21- உலு கிளாங் பெட்ரோல் நிலையத்தின் கழிவறையில் கைப்பையை திருடியதன் சந்தேகத்தின் பேரில் ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட நான்கு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 6ஆம் தேதி தனது Coach கைப்பையை அந்த கழிவறையிலேயே மறந்துவிட்டு வந்ததை இரவு மணி 11.13 அளவில் 36 வயது பெண் உணர்ந்து மறுநாள் காலையில் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவியில் பரிசோதனை செய்துள்ளார். அதில் பெண் ஒருவர் தனது கைப்பையுடன் அந்த குளியல் அறையில் இருந்து வெளியேறும் காட்சியைக் கொண்ட காணொளி பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து போலிஸ் புகார் செய்யப்பட்டு விசாரணையைத் துவங்கிய போலிஸ் அம்பாங்கிலுள்ள ஒரு வீட்டில் ஒரு ஆடவர் மற்றும் இரண்டு பெண்களை கைது செய்ததோடு
தாமான் மெலாவத்தியில் இந்தோனேசிய பெண் ஒருவரையும் கைது செயதது. அந்த நான்கு பேரும் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!