Latestஉலகம்சினிமா

6 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு போலீவுட் ராணி தீபிகா கர்ப்பம்

புது டெல்லி, மார்ச் 1 – போலீவூட்டின் நட்சத்திர தம்பதியான Ranveer Singh – Deepika Padukone 6 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, முதல் முறையாக பெற்றோராகவிருக்கின்றனர்.

தாம் கர்ப்பமாக இருப்பதை Instagram பதிவில் உறுதிப்படுத்திய தீபிகா, வரும் செப்டம்பர் வாக்கில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

அப்பதிவை, பிறந்த குழந்தைகள் அணியும் காலணி, சட்டை, தொப்பி உள்ளிட்ட படங்களைக் கொண்ட போஸ்டருடன் ரன்வீரும் தனது Instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

British Academy திரைப்பட விழா (BAFTA) -வின் சிவப்புக் கம்பள நிகழ்வின் போது தீபிகா தனது வயிற்றை மறைத்துக் கொண்டு நடந்துச் சென்ற சம்பவம் வைரலான போதே, அவர் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் வதந்தியும் யூகங்களும் பரவியது குறிப்பிடத்தக்கது.

38 வயது தீபிகாவும் 39 வயது ரன்வீரும் 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஏரியில் சொகுசாக திருமணம் செய்துக் கொண்டனர்.

அந்த நட்சத்திர தம்பதிக்கு சமூக ஊடகங்களிலும், பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!