
கோலாலம்பூர், மே 19- இன்று மாலை, புத்ராஜெயா, கோலாலும்பூர் மற்றும் 11 மாநிலங்களிலிருக்கும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வரவிருப்பதாக வானிலை ஆய்வு மையமான MetMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கியமாக பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், பகாங் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் சபா சரவாக்கில் இருக்கும் பெருவாரியான பகுதிகள் பாதிக்கப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யும் அறிகுறிகள் இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டுமென்று MetMalaysia அறிவுறுத்தியுள்ளது.