
ஷா ஆலாம், மே-21 – கேரித் தீவில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் 18 வயது இளைஞனை கொலைச் செய்த குற்றச்சாட்டிலிருந்து ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் ஜவரை விடுதலைச் செய்துள்ளது.
36 வயது M திருமுகம், 34 வயது V வசந்தன், 34 வயது G துரைராஜு, 54 வயது M ரகு வேலன்
31 வயது M லோகேஸ்வரன் ஆகியோரே அந்த ஐவராவர்.
குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்புத் தவறியதாக, நீதிபதி ஹஸ்லினா ஹுசாய்ன் தனது தீர்ப்பில் கூறினார்.
அரசு தரப்பு வெறும் சூழ்நிலை ஆதாரங்களைக் கொண்டே வழக்கை வடிவமைத்துள்ளது; அதோடு, குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற சாட்சிகளையோ சந்தேக நபர்களையோ அடையாளம் காணவோ அல்லது அழைக்கவோ தவறி விட்டதை நீதிபதி சுட்டிக் காட்டினார்.
அரசு தரப்பின் முக்கிய சாட்சியான மரணமடைந்தவரின் தந்தை கொடுத்த வாக்குமூலங்களின் நம்பகத்தன்மை குறித்தும், நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நடந்த அனைத்து சம்பவங்களையும் அனைத்து தரப்புகளையும் அரசு தரப்பு முழுமையாக விசாரிக்கத் தவறியதால், வழக்கு முழுமையற்றதாகவும் நம்பமுடியாததுமாக உள்ளது.
எனவே தற்காப்பு வாதம் புரிய அழைக்காமலேயே ஐவரையும் விடுவிப்பதாக, ஹஸ்லினா தெரிவித்தார்.
2020 மார்ச் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் உலு லங்காட், கேரித் தீவு கடற்கரையில் விக்னேஷ் சந்திரசேகரைக் கொலைச் செய்ததாக மேற்கண்ட ஐவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.